ராஜேந்திர சோழனுடன் திமுக தலைவரை ஒப்பிட்டு பேசிய எம்.பி கனிமொழி.!

Default Image

மு.க.ஸ்டாலின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி கனிமொழி, ராஜராஜ சோழனுடைய மகன் ராஜேந்திர சோழன் எப்படி கங்கையை மீட்டு கங்கை கொண்டான் என்று அழைக்கப்பட்டாரோ அதே போல் திமுக தலைவர் இந்தியாவில் ஜனநாயக மீட்கும் கங்கை கொண்டனாக திகழ்வார் என கனிமொழி தெரிவித்தார். மேலும் மக்களை பிளவுப்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடே பற்றி எரிவதாகவும், சில தலைவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் சல்மா, விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்