விரைவில் நகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படும் -செல்லூர் ராஜூ!

Published by
Rebekal
தமிழகத்தில் விரைவில் நகரம் ரேஷன் கடைகள் அறிமுகப்படுத்தப்படும் என செல்லூர் ராஜூ அறிவிப்பு.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு துறை பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகளுடன் இனிவரும் நாட்களில் எடுக்கவேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு, கூட்டுறவுத்துறை அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம்.
கூட்டுறவு வங்கிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை தீட்டியுள்ளோம். விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் கொடுத்து வருகிறோம். கொரோனா காலத்தில் கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளுக்கு இல்லை, ஆனால் விவசாயிகளுக்கு பயிர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கொடுத்துள்ளோம். தமிழகம் முழுவதும் 3501 ரேஷன் கடைகள் தற்போது உள்ளது. இன்னும் ஆய்வு செய்து விரைவில் நகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் தொடங்கப்படும். சென்னையில் 400 நகரும் ரேஷன் கடைகள் வரை திறக்கப்பட வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

1 hour ago

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…

2 hours ago

“சீனாக்காரங்க என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க” தங்கத்தை உருக்கி 30 நிமிடங்களில் பணமாக மாற்றும் ஏடிஎம்.!!

சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…

2 hours ago

சென்னை அவ்வளவுதான்..கோப்பை ஆர்சிபிக்கு தான்..அந்தர் பல்டி அடித்த அம்பதி ராயுடு!

சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…

2 hours ago

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

3 hours ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

4 hours ago