திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் தங்களின் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே புதிய படங்கள் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் கடிதம்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு 6000- க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது.
ஆயினும், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் சுற்றுலா தளங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால், பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், தங்களின் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே புதிய படங்கள் அனைத்தும் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், QUBE, UFO கட்டணங்களை இனி செலுத்தமுடியாது திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு 51 தயாரிப்பாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். திரையரங்கில் காட்டப்படும் விளம்பர வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் எனவும், ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் கிடைக்கும் தொகையில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…