கட்டண உயர்வால் 7 பயணிகளுடன் சென்ற மலை ரயில்..!

Default Image

நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் ,வெளி நாட்டுகள் மற்றும் உள்ளூர்வாசிகளும் வருகின்றனர்.

இந்நிலையில் மலை ரயிலில் பயணம் செய்ய அனைவரும்ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதையெடுத்து கடந்த  1-ம் தேதில் முதல் மலை ரயில் கட்டணத்தை தெற்கு ரயில்வே இரண்டு மடங்காக உயர்த்தியது.

முன்பு  குன்னூர், ஊட்டி இடையே 35 ரூபாய் கட்டணம் செலுத்தி சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர். ஆனால் தற்போது 80 ரூபாயாகவும், முதல் வகுப்பிற்கான  ரூ.185- லிருந்து  ரூ.290 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வால்  சுற்றுலா பயணிகள் பயணம் செய்வதை  நிறுத்தியுள்ளனர். இதனால் மலை ரயிலில் பயணிகளின்றி நேற்று முன்தினம்  7 பயணிகளுடன் ரயில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்