ஊரடங்கு உத்தரவால் தாயின் இறுதி சடங்கை வீடியோக்காலில் பார்த்து கதறி அழுத்த ராணுவ வீரர்.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவசரத் தேவைக்குக் கூட, வெளி மாநிலங்களில் இருந்து வரவோ, அல்லது இங்கு இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த புக்கம்பட்டி, அழகா கவுண்டன் ஊரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மாது(65). இவர்களது மகன் சக்திவேல்(42). ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை சக்திவேலின் தாய் மாது உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, ராஜஸ்தான் ரெஜிமெண்ட்டில் உள்ள சக்திவேலுக்கு, அவரது தந்தை செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் சக்திவேல் ராஜஸ்தானிலிருந்து மேச்சேரி வர இயலவில்லை.
இதனால் தனது தாயின் இறுதிச் சடங்கை வீடியோகால் மூலம் பார்த்துள்ளார். இதனை பார்த்த சக்திவேல் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இதை பார்த்த அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த வீடியோ இணைய தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…