8 மாத குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு விற்ற தாய்…! போலீசார் தீவிர விசாரணை…!

Published by
லீனா

தூத்துக்குடியில் 8 மாத குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு ஜெபமலர் என்ற பெண் விற்பனை செய்துள்ளார். 

கடந்த 2019-ஆம் ஆண்டு, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டனுக்கு (38), தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெபமலருக்கும் (27) திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜெபமலர் அவரது குழந்தையை கூட்டிக் கொண்டு, தூத்துக்குடிக்கு வந்துள்ளார். இங்கு வந்த அவர் குழந்தையை, ரூ.3 லட்சத்திற்கு விற்றுள்ளார்.

இதற்கிடையில், மணிகண்டன் மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக தூத்துக்குடி வந்துள்ளார். அப்போது ஜெபமலரிடம் குழந்தை எங்கே எனக் கேட்டுள்ளார். அதன்பின் தான் அவர் குழந்தையை 3 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மணிகண்டன் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், ஜெபமலர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Posts

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

20 minutes ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

2 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

3 hours ago

வீங்கிய வயிற்றுடன் உயிருக்கு போராடும் நடிகர் அபினய்! கல்லீரல் நோயால் அவதி…

சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…

3 hours ago

காலையில் சரிவு.. மதியம் ஏற்றம் .. 2வது முறையாக தங்கம் விலையில் மாற்றம்!

சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…

4 hours ago

பா.ஜ.க. தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுகின்றனர்! செல்வப் பெருந்தகை கண்டனம்!

சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில்,   மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…

5 hours ago