மூன்று மகன்கள் இருந்தும் தாய், தந்தை துாக்கிட்டுத் தற்கொலை…! காரணம் என்ன…?

Default Image

மூன்று மகன்கள் இருந்தும் முதிய தம்பதி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் பட்டியை சேந்தவர் குணசேகரன், இவருடைய மனைவி செல்வி, இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர், முதல் மகன் செவ்வாய்ப் பேட்டையிலும் இரண்டாவது மகன் பெரம்பூளுரிலும் வசித்து வருகின்றனர், மேலும் கடைசி மகன் ஸ்ரீதர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் மேலும் ஸ்ரீதர் அப்பகுதியில் தச்சராக பணியாற்றி வருகின்றனர், இவருக்கு குடிப்பழக்கம் மிகவும் அதிகமாக இருந்துள்ளது திருமணமாகாமல் இருக்கும் இவர் வேலை செய்யும் பணத்தை வீட்டில் கொடுக்காமல் வந்துள்ளார்.

இந்த நிலையில் குணசேகரனிற்கு ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருந்ததால் வீட்டில் வறுமை நிலவியது, 4 மாதமாக வீட்டின் வாடகை கூட கொடுக்கவில்லையாம். வீட்டிற்கு தேவையான பணம் கிடைக்காத காரணத்தால் பல இடங்களில் காவலாளியாக பணியாற்றி வந்தார், ஆனால் அந்த பணமும் அவரது வீட்டிற்கு கட்டுப்படியாகவில்லை.

மேலும் வீட்டு வாடகை 4 மாதங்கள் வீட்டு வாடகை கொடுக்கமால் இருந்ததால் தனது இரண்டு மகன்களையும் தொடர்பு கொண்டுள்ளார். அவர் மகன்களிடம் தனது வறுமையை பற்றி கூறியுள்ளார், அவர்களுடைய மகன்கள் வாடகை பற்றி ஒன்னும் இல்லை நீங்கள் எங்களுடன் வந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

மேலும் மகன்களுடன் பேசிய முடித்து விட்டு, புதன் கிழமை இரவு திடீரெனெ குணசேகரன் மற்றும் அவருடைய மனைவி செல்வி இரண்டு பெரும் தூக்கிட்டு தற்கொலை செய்தனர், மேலும் 10 மணிக்கு வீட்டிற்கு வந்த கடைசி மகன் ஸ்ரீதர் கதவைத் தட்டியுள்ளார். தட்டி பார்த்ததில் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாகப் பார்த்த போது பெற்றோர் துாக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அலறினர்.

சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து இருவரின் உடலை மீட்டனர், மேலும் கடந்த வியாழக்கிழமை மாலை சென்னை ஓட்டேரியில் உள்ள மின்மயானத்தில் இருவரது உடல்களுக்கும் போலீசார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Black paint DMK
sajjan kumar
Match abandoned due to rain
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman