கஞ்சாவுக்கு அடிமையான தம்பியை கொன்ற தாய் மற்றும் அண்ணன்.!

Published by
murugan
  • அசாருதீன்  என்பவர் தாய் மற்றும் தந்தையிடம் போதைப்பொருள் வாங்க காசு கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார்.
  • ஆத்திரமடைந்த தாய் ஹபீபா பேகம் மற்றும் அண்ணன் யாசர் இருவரும் சேர்ந்து அசாருதீன் கை ,கால்கள்  பிடித்து கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது.

மதுரை வண்டியூர் சுந்தர் நகர் 2-வது  தெருவை சார்ந்த சிக்கந்தர் மைதீன். இவரது மனைவி ஹபீபா பேகம். இவர்களுக்கு யாசர் அராபத் , அசாருதீன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகனான அசாருதீன் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளார்.

இதனால் அடிக்கடி வீட்டில் வந்து தனது தாய் மற்றும் தந்தையிடம் போதைப்பொருள் அதாவது கஞ்சா வாங்க காசு கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தன் அண்ணன் யாசரை தகாத வார்த்தைகள் பேசி பிரச்சினை செய்துவந்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தாய் ஹபீபா பேகம் மற்றும் அண்ணன் யாசர் இருவரும் சேர்ந்து அசாருதீன் கை ,கால்கள்  பிடித்து கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அசாருதீன் உடலை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

Published by
murugan

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

6 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

7 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

8 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

9 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

9 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

10 hours ago