காலையில் பிரசவம் மாலையில் கல்யாணம்.! காவல்துறை எடுத்த அதிரடி முடிவு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோகிலா என்ற பெண் காதல் வசப்பட்டு திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றக்கொண்ட அதிர்ச்சி சம்பவம். இதை கண்ட பெற்றோர் காவல்நிலையத்தில் புகார்.
  • போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலா பெற்ற குழந்தையின் அப்பா பரமசிவம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தல்படி அந்த பெண்ணை பரமசிவம் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதனின் மகள் 20 வயதான கோகிலா, இவர் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இதனிடையே கோகிலாவும் அதே பகுதியை சேர்ந்த செங்கேணி மகன் பரமசிவம் என்பவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கோகிலா கர்ப்பமாகியுள்ளார். இதையறிந்த கோகிலாவும், காதலன் பரமசிவனும், பயத்தில் இதைப்பற்றி வீட்டில் சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளனர். பின்னர் வழக்கமாக கல்லூரிக்கு செல்வது வீட்டுக்கு வருவது என கோகிலா இருந்து வந்துள்ளார். இது ஒரு கட்டத்தில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக மாற கோகிலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோகிலாவை ஆவணிப்பூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது, திருமணம் ஆகாமல் கோகிலா குழந்தை பெற்றது அவரது பெற்றோரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்ட பெற்றோர் ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலா பெற்ற குழந்தையின் அப்பா பரமசிவம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தல்படி அந்த பெண்ணை பரமசிவம் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். பின்னர் பரமசிவம் மற்றும் கோகிலா ஆகிய இருவருக்கும் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் பெற்றோர் போலீசார் மற்றும் உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…

1 hour ago

சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…

சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…

1 hour ago

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…

2 hours ago

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!

தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…

2 hours ago

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…

2 hours ago

“மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு” – அரசாணை வெளியீடு.!

நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…

2 hours ago