முழு ஊரடங்கான நேற்றைய தினம் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலின் வளாகத்தில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் அரசு விதிமுறைகளை பின்பற்றி நடைப்பெற்றது.
தேவநாதசுவாமி கோவில் என்பது 108வைணவ தலங்களில் ஒன்றாகும். இந்த கோவில் கடலூரில் உள்ள திருவந்திபுரத்தில் உள்ளது . இங்கு முகூர்த்த தினங்களில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கோவில் மூடப்பட்டுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் அரசின் விதிமுறைகளை பின்பற்றி திருமணங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முழு ஊரடங்கு தினமான நேற்று 50க்கும் அதிகமான திருமணங்கள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் மணமக்களின் பெற்றோர்களுடன் அந்த கோவிலின் வெளிப்பிரகாரத்திலும், திருவந்திபுரத்தில் உள்ள திருமண மண்டபங்களிலும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடைப்பெற்றது. அரசு விதிமுறைகளை பின்பற்றி தான் திருமண நிகழ்வுகள் நடைபெறுகிறதா என்பதை போலீசார் கண்காணித்து வந்தனர். இது தொடர்பாக கூறிய போலீஸ் அதிகாரி,ஏற்கனவே திருமண நாளை குறித்து விட்டதாகவும், அரசு நடைமுறைகளை பின்பற்றி திருமணத்தை நடத்தலாம் என்று திருமண வீட்டார்கள் கூறியதாகவும், அவ்வாறு அரசு விதிமுறைகளை பின்பற்றி தான் திருமணம் நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து வருவதாகவும், கூட்டம் அதிகமாக இருந்தாலோ, அரசு விதிமுறைகளை மீறினாலோ உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…