முழு ஊரடங்கான நேற்றைய தினம் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலின் வளாகத்தில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் அரசு விதிமுறைகளை பின்பற்றி நடைப்பெற்றது.
தேவநாதசுவாமி கோவில் என்பது 108வைணவ தலங்களில் ஒன்றாகும். இந்த கோவில் கடலூரில் உள்ள திருவந்திபுரத்தில் உள்ளது . இங்கு முகூர்த்த தினங்களில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கோவில் மூடப்பட்டுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் அரசின் விதிமுறைகளை பின்பற்றி திருமணங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முழு ஊரடங்கு தினமான நேற்று 50க்கும் அதிகமான திருமணங்கள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் மணமக்களின் பெற்றோர்களுடன் அந்த கோவிலின் வெளிப்பிரகாரத்திலும், திருவந்திபுரத்தில் உள்ள திருமண மண்டபங்களிலும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடைப்பெற்றது. அரசு விதிமுறைகளை பின்பற்றி தான் திருமண நிகழ்வுகள் நடைபெறுகிறதா என்பதை போலீசார் கண்காணித்து வந்தனர். இது தொடர்பாக கூறிய போலீஸ் அதிகாரி,ஏற்கனவே திருமண நாளை குறித்து விட்டதாகவும், அரசு நடைமுறைகளை பின்பற்றி திருமணத்தை நடத்தலாம் என்று திருமண வீட்டார்கள் கூறியதாகவும், அவ்வாறு அரசு விதிமுறைகளை பின்பற்றி தான் திருமணம் நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து வருவதாகவும், கூட்டம் அதிகமாக இருந்தாலோ, அரசு விதிமுறைகளை மீறினாலோ உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…