வரும் நிதியாண்டில் 20-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
20-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள்:
பேரவையில் ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. அடுத்த நிதியாண்டில் 20-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
ஏற்கனவே செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மக்களின் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசின் அனுமதியைப் பெற்று ஆரம்ப சுகாதார நிலையங்களை மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு பரிசீலிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
தரம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை:
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தேக்கம்பட்டியிலும் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எரிசினம்பட்டியில் இருந்து 17 கி.மீ தொலைவில் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடனும் செயல்பட்டு வருகிறது. எனவே, எரிசினம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…