20-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

Default Image

வரும் நிதியாண்டில் 20-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

20-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள்:

பேரவையில் ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. அடுத்த நிதியாண்டில் 20-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

ஏற்கனவே செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மக்களின் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசின் அனுமதியைப் பெற்று ஆரம்ப சுகாதார நிலையங்களை மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு பரிசீலிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

தரம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை:

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தேக்கம்பட்டியிலும் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எரிசினம்பட்டியில் இருந்து 17 கி.மீ தொலைவில் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடனும் செயல்பட்டு வருகிறது. எனவே, எரிசினம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk