150க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் மற்ற இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட உள்ளது. – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கடந்த 6ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று நிறைவு பெரும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இந்த நிறைவு விழாவில் முதல்வர் பேசுகையில், ‘ இலக்கியச் செழுமை மிக்க நமது தமிழ் புத்தக படைப்புகளை உலகமெங்கும் கொண்டு சேர்க்க, உலகெங்கிலும் உள்ள சிறந்த அறிஞர்களின் அறிவு செறிந்த படைப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு அதற்காக செயல்பட்டு வருகிறது.’ என குறிப்பிட்டார்.
மேலும், நமது அரசு சார்பில் புத்தக மொழிப்பெயர்ப்பு ஊக்கத்தொகையாக 3 கோடி ரூபாய் வழங்கப்படும். தமிழ்நாட்டில் தமிழாட்சி நடக்கும் போது, இதுபோன்ற பன்னாட்டு புத்தக கண்காட்சி நடப்பது வியப்புக்குரிய விஷயமல்ல. மேலும், தந்தை பெரியாரின் சிந்தனைகளை உலக மொழிகளில் மொழிப்பெயர்த்து விரைவில் வெளியிடவுள்ளோம். என முதல்வர் கூறினார்
மேலும் அவர் பேசுகையில், ‘ 150க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் மற்ற இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட உள்ளது.’ என அடுத்த திட்டங்களை குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…