தேவந்திர குல வேளாளர் கோரிக்கை மனு…உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

Published by
Kaliraj

தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்ததை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்துஅரசு 4.3.2019 பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவும், தடை விதிக்கக்கோரி திருச்சி டி.வளவனூரைச் சேர்ந்த எம்.அமர்நாத் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

எம்.அமர்நாத்  தாக்கல் செய்த இந்த மனுவில் தமிழ்நாட்டில்  எஸ்சி பட்டியலில் உள்ள பள்ளர், குடும்பன், தேவேந்திரகுலத்தான், கடையன், பன்னாடி மற்றும் காலாடி ஆகிய வகுப்புகளை எஸ்.சி பட்டியலில் இருந்து நீக்கியும் 6 வகுப்புகளையும் சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க அரசிடம் மனு அளிக்கப்பட்டது.

எஸ்சி பட்டியலில் ஒரு சாதியை சேர்க்கவோ, நீக்கவோ, பிரிக்கவோ நாடாளுமன்றத்துக்கு தான் அதிகாரம் உள்ளது.குடியரசு தலைவர் தான் இது குறித்து அறிவிப்பாணை பிறப்பிக்க முடியும். மாநில அரசுக்கு அத்தகைய அதிகாரம் கிடையாது எனக் கூறப்பட்டுள்ளது.

இம்மனு மீதான விசாரணை சென்ற வாரம் வந்தபோது, ஜாதி பிரிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் மற்றும் 1981-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பட்டியல் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தங்களை ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கவும், மனுவை தள்ளுபடி செய்யவும் தமிழர் விடுதலை களத்தின் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார், மூவேந்தர் புலிப்படைத் தலைவர் வழக்கறிஞர் பாஸ்கர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்து உள்ளனர்.

இதில், தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்கவும், மேலும் இது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு.

கடந்த 30 ஆண்டுகளாக பல சாதி தொடர்பாக ஆய்வு செய்ய மாநில அரசு குழு அமைத்து உத்தரவிட்டு உள்ளது.

மேலும் மனுவில்சமூக பெண்களை தவறாக குறிப்பிட்டு உள்ளார். இதற்காக மனுதாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பட்டியல் வெளியேற்றம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் மனு மட்டுமே கொடுத்து உள்ளோம். எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

தவறான தகவல்களை நீதிமன்றத்துக்கு தெரிவித்து உள்ளார். இதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றுஅந்த மனுக்களில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனுக்கள் அக்.,14 (புதன்)அன்று விசாரணைக்கு வருகின்றன.

Published by
Kaliraj

Recent Posts

தொடர் தோல்விகளில் தவிக்கும் லைக்கா..கை கொடுத்து காப்பாற்றுமா விடாமுயற்சி?

தொடர் தோல்விகளில் தவிக்கும் லைக்கா..கை கொடுத்து காப்பாற்றுமா விடாமுயற்சி?

சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…

17 minutes ago

விராட் கோலிக்கு என்னாச்சி? ‘ஷாக்’கான ரசிகர்கள்!

நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்ற இந்தியா அதே தெம்புடன் இன்று…

52 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி… டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நுழைய முடியாது.! ரசிகர்ளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடு…

பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான…

1 hour ago

INDvENG : டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு! பந்துவீச தயாராகும் இந்தியா!

நாக்பூர் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…

1 hour ago

அஜித்தின் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம்.! அமர்க்களம் செய்த ரசிகர்கள்…

சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித்…

2 hours ago

‘சாம்பியன்ஸ் டிராபியில் நான் இல்லை’ ஸ்டோனிஸ் திடீர் ஓய்வு! ஆஸ்திரேலியாவுக்கு மேலும் சிக்கல்?

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35…

2 hours ago