பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் இ-மெயில் மூலமாக புகார் அளித்து வருகின்றனர்.
பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் தேடப்பட்டு வந்த யூ-டியூபர் மதன் தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டார்.
ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்ததால் மதனின் வங்கிக்கணக்கையும் போலீசார் முடக்கினர்.பின்னர்,அவரது சொகுசு கார்கள்,லேப்டாப் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர், பப்ஜி மதனை ஜூலை 3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து,பப்ஜி மதனின் யூடியூப் சேனல்களை சைபர் கிரைம் போலீசார் முடக்கினர்.
இதனையடுத்து,பப்ஜி மதனிடம் பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் dcpccbi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில்,பப்ஜி மதனிடம் பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இ-மெயில் மூலமாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்து வருகின்றனர்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…