பருவமழை முன்னேற்பாடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து காணொளி மூலமாக ஆலோசனை.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வரும் 5-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சில அதிகாரிகள் கலந்து கொண்டுளள்னர். இதற்க்கு முன்னதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தலைமையிலும் ஆலோசனை அடைபெற்றது குறிப்பிடத்தக்கது.