பணம் என்றால் ஓ.எஸ்.மணியன்; பணம் இல்லேன்னா நோ.எஸ்.மணியன்- ஸ்டாலின் ..!

கஜா புயலின்போது மக்கள் எதிர்ப்பால் சுவர் ஏறி குதித்து ஓடியவர் அமைச்சர் ஓ.எஸ் மணியன் என ஸ்டாலின் தெரிவித்தார்.
நகை மாவட்டம் வேதாரண்யத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். வேதாரண்யம் – வேதரத்தினம் , நாகை – ஆளூர் ஷாநவாஸ் , கீழ்வேளூர் -மாலிக் ஆகியோருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய ஸ்டாலின், பணம் என்றால் ஓ.எஸ்.மணியன்; பணம் இல்லேன்னா நோ.எஸ்.மணியன். கஜா புயலின்போது மக்கள் எதிர்ப்பால் சுவர் ஏறி குதித்து ஓடியவர் அமைச்சர் ஓ.எஸ் மணியன் என தெரிவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிவாரணம் வழங்கவில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கவலை இல்லை. பிரதமர் மோடி இனையம் துறைமுகம் கொண்டு வருவோம் என்கிறார். இனையம் துறைமுகம் திட்டத்தை கொண்டு வரவில்லை என முதலமைச்சர் சொல்லுகிறார். துறைமுகம் விவகாரத்தில் மீனவர்களை பிரதமர், முதலமைச்சர் ஏமாற்றுகின்றனர் என குற்றச்சாட்டினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024