ஜனவரி முதல் வாரத்தில் இருந்து என்னுடைய பரப்புரையை தொடங்கவுள்ளேன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய முக ஸ்டாலின், ஜனவரி முதல் வாரத்தில் இருந்து என்னுடைய பரப்புரையை தொடங்கவுள்ளேன் என்றும் கிராமசபை கூட்டங்கள் முடிந்தபிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான் அமையும். திமுகவுக்கு அண்ணா மற்றும் கலைஞர் என இரண்டு பலம் உள்ளது. நான் என்பதை விடுங்கள், நாம் என்று மாறினால் தான் நிச்சயம் வெற்றி பெற முடியும். அதிமுகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். நமக்கு எதிராக மும்முனை தாக்குதல் நடத்துகிறார்கள். இதையும் மீறி 6-வது முறையாக வெற்றி பெற வேண்டும். பணமா? மக்கள் மனமா? என்ற நிலையை மாற்றி தேர்தலில் வெற்றிபெற வேண்டும். பணத்தை வெல்லும் ஆற்றலை மக்களுக்கு உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…