அதிமுக எம்பி முகமது ஜான் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முகமது ஜான், சொந்த ஊரான ராணிப்பேட்டையில் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், முகமது ஜான் மறைவிற்கு எதிர்க்கட்சி தலைவர் இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் திடீரென்று மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
முகமது ஜான் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் மாநிலங்களவையில் தமிழகத்தின் குரலாய் ஒலித்தவர் எனவும் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும், குடும்பத்தினர், உறவினர்கள், அதிமுக-வினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபம், ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…