தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தோல்வி அடைந்தார்.இந்நிலையில் இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், என் தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி. அதிகாரம் மற்றும் பண பலத்தால் தோற்கடிக்கப்பட்டேன். வாக்களித்த தேனி தொகுதி மக்களுக்கும், உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றிகள்.
பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ‘சீல்’ இல்லை. கேட்டால் ‘அரக்கு’ கீழே விழுந்துவிட்டதாக கூறினர் .தேனி மக்களவை தொகுதியில் தில்லுமுல்லுகள் நடந்துள்ளன.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஜெயிக்க மோடி உதவியுள்ளார். தேனி மாவட்டத்தில் விவிபேட் வாக்குகளை முழுமையாக எண்ண வேண்டும்.மோடிக்கு தமிழிசை, ஹெச்.ராஜா, பொன்னார் மீது இல்லாத காதல், ஓ.பி.எஸ் மகன் மீது இருக்கிறது. அது ஏன் என தெரியவில்லை.
எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும், எதிர்க்கட்சிகள் கூட்டணி சேராததால் மோடிக்கு சாதகம் .மேலும் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்று கூறினார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…