எங்கும் இந்தி, எதிலும் இந்தி… பிரதமர் மோடியின் சாதனை.! முதல்வர் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

MK Stalin : மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது, தமிழர்கள் எப்படி நபுவார்கள்.? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் தேதியான ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சார வேலைகளின் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்தில் தனது பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். நமோ எனும் செயலி மூலம் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி. எனது பூத் வலிமையானது என்ற தலைப்பில் பேசுவையில், எனக்கு தமிழ் மொழி தாய் மொழியாக இல்லாதது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்றும், தமிழ் மொழியில் தன்னால் பேச முடியவில்லை என்பது மனதில் ஆழமான வலியாக உள்ளது என்றும் பேசியிருந்தார்.

அவரது பேச்சுக்கு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது விமர்சனத்தை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். அதில் மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது பிறகு எப்படி தமிழர்கள் நம்புவார்கள் என கேட்டு இருந்தார்.

அந்த பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறுகையில், நேற்று மாலைச் செய்தி, தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி. நேற்று காலைச் செய்தி – அழகிய தமிழ்ச்சொல் ‘வானொலி’ இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? 

கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும். ஆனால், மோடியின் கண்ணீர், ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்? கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே, கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கியாரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு என்பதும். விமானங்களில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை. எங்கும் இந்தி. எதிலும் இந்தி என மாற்றியதுதான் மோடி அரசின சாதனை. தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும் என பிரதமர் மோடியின் தமிழ் கருத்துக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். 

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

37 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

43 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

1 hour ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago