பிரதமர் நரேந்திர மோடி தேனி குரங்கணி மலை காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல்!
பிரதமர் நரேந்திர மோடி தேனி குரங்கணி மலை காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியுள்ளார். குரங்கணி காட்டுத்தீயில் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். விமானப்படை, கமாண்டோ வீரர்கள் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகத்தின் துரித செயல்பாட்டையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.