நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்களில் காக்க வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைவது குறித்து தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லை பாதுகாப்பாக கொள்முதல் செய்ய வேண்டியது அரசின் பணியாக இருக்க வேண்டும்.
விவசாயிகள் பாதிப்படையக் கூடாது அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஏற்கனவே தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது.
தமிழகத்தில் 469 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகள் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து தூரத்திலிருக்கும் விவசாயம் பாதிப்படைய கூடாது, விவசாயிகள் வந்து செல்லும் போக்குவரத்து செலவினங்களும் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் செய்யும் வகையில், நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.
நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி வழக்கை ஜூலை 15-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…