பிங்க் பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்!

பிங்க் வண்ணம் பூசப்பட்ட பேருந்துகளை அறிமுகப்படுத்தி வைத்த சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பேருந்தில் பயணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து பெண்கள் இலவசமாக பயணித்து வந்த நிலையில், தமிழகத்தில் கட்டணப் பேருந்தா அல்லது இலவச பேருந்தா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மகளிர் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளை பிங்க் நிறத்தில் வண்ணம் பூசி முதல் கட்டமாக 60 பேருந்துகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதனை சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து படிப்படியாக அனைத்து இலவச பேருந்துகளுக்கும் பிங்க் வண்ணம் பூசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிங்க் வண்ணம் பூசப்பட்ட பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமலும், ஆண்கள் வழக்கம்போல கட்டணம் செலுத்தியும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்