எம்.எல்.ஏ. பிரபு விளக்கமளிக்கத் தேவையில்லை-தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன்

Default Image

அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனால் சபாநாயகர் தனபால்  அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என்று  கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசனிடம் மனு அளித்தார்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அதில் சபாநாயகரின் நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவுக்கும் பொருந்தும்.மேலும் சபாநாயகர் நோட்டீசுக்கு பிரபு விளக்கம் அளிக்க தேவையில்லை சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்