மாநகராட்சி ஊழியர்களுக்கு மு.க.ஸ்டாலின் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கல்- சென்னை அயனாவரம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அரசு மட்டும் அல்லாமல், மக்களும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தின் எதிர்க்கட்சியின் தலைவராகிய மு.க.ஸ்டாலின் தற்போது சென்னை அயனாவரத்தில் வேலை செய்யும் மாநகராட்சி ஊழியர்களுக்கு இலவசமாக கிருமிநாசினி மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை வழங்கியுள்ளார். இவரது இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.