கலைஞரைப் போல உலக தமிழர் இதயங்களில் மு.க.ஸ்டாலின் இடம்பிடிப்பார் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், பின்தங்கியுள்ள தமிழகத்தை முன்னெடுத்து சென்று தமிழ் மக்களுக்கு அனைத்து நன்மைகளையும் செய்வார் என்றும் சிறந்த முதல்வராக செயல்படுவார் எனவும் கூறியுள்ளார். முதல்வராக பதவியேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கலைஞரை போல் உலக தமிழர் இதயங்களில் முக ஸ்டாலினும் இடம்பிடிப்பார் என்றும் மாநிலங்களில் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது, மத்தியில் ஒரு கட்சி ஆட்சியில் இருப்பது என்பது கடந்த காலங்களில் இந்திய நாட்டின் ஜனநாயகத்தோடு சிறப்பம்சம் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வரும் 7ம் தேதி முதல்வர் பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலின், நேற்று நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, இன்று 133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்துடன், முக ஸ்டாலின் ஆளுநர் மாளிகை சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…