மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்.!

Default Image

ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீடு உயர்த்தியதற்கு மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீடு நாளொன்றுக்கு 7,000 என்ற அளவில் இருந்த நிலையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று நாளொன்றுக்கு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்திற்கான ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீட்டை 7 ஆயிரத்திலிருந்து 20 ஆக உயர்த்திய மத்திய அரசுக்கு நன்றி எனவும், தற்போதைய சூழலில் உயிர்காக்கும் மருந்து, ஆக்சிஜன் உபகரணங்கள் தேவை இன்றியமையாதது  என தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் முதல் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளில் ரெம்டிசிவர் மருந்து வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts