டெல்லியில் திமுக அலுவலகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். அண்ணா- கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அண்ணா- கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் சோனியா காந்தி, பா.சிதம்பரம், வைகோ, பரூக் அப்துல்லா, டி ராஜா, திருநாவுக்கரசர், கபில் சிபில் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தில் கட்சிக் கொடியை முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஏற்றி வைத்தார். டெல்லி திமுக அலுவலகத்தில் குத்துவிளக்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்றி வைத்தார்.
டெல்லி அண்ணா -கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா சிலையை துரைமுருகனும், கலைஞர் சிலையை டி.ஆர்.பாலு திறந்து வைத்தனர். பேராசிரியர் அன்பழகன் நூலகத்தை சோனியா காந்தி திறந்துவைத்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…