#Breaking : ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.! 

Default Image

பாரத ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.   

பாரத் ஜோடோ யாத்ரா எனும் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை மூலம் கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை 150 நாட்களில் 3,570 கிமீ கடந்து காஷ்மீரில் முடிக்க உள்ளார் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி.

இந்த யாத்திரை இன்று கன்னியாகுமரியில் இன்று தொடங்க உள்ளதை அடுத்து, இந்த யாத்திரையை தொடங்கி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி வந்திருந்தார்.

கன்னியாகுமரி வந்திறங்கிய ராகுல் காந்தியை கட்டியணைத்து வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின். பின்னர் காந்தி மண்டபத்தில் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் என அரசியல் தலைவர்கள் பலர் இருந்தனர். பின்னர் தேசிய கொடியை தமிழக முதல்வர், ராகுல் காந்திக்கு வழங்கி ஒற்றுமை பாதயாத்திரியை தொடங்கி வைத்தார்.

தற்போது, கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து தனது பாரத் ஜோடோ யாத்ரா எனும் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார்  ராகுல் காந்தி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்