அண்ணாசிலை அவமதிப்புக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்.!

Default Image

இன்று கன்னியாகுமரி குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. காவல் துறையினர்அண்ணா சிலை பீடத்தில் கட்டப்பட்ட காவி கொடியை அகற்றினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்அண்ணாசிலை அவமதிப்பு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்திற்கு கீழே போகும் அவர்களின் எண்ணம், தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை எதுவும் இல்லாததால் மறைந்த மாமேதை மீது வன்முறை காட்டுகிறார்கள் எனவும் அண்ணா சிலை பீடத்தில் மீது காவிக்கொடி கட்டியவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தயுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்