தண்ணீர் பிரச்சனை தமிழகத்திலேயே இல்லை..! என்று மக்களை கொச்சைப்படுத்துகிறார் அமைச்சர்..!ஸ்டாலின் தாக்கு

Default Image

தண்ணீர் பிரச்சனை இல்லை என கூறி மக்களை கொச்சைப்படுத்துகிறார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி என்று மு.க ஸ்டாலின் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளன்று மக்களின் குடிநீர் பிரச்னைகள் குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காண சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து அதிமுக அரசு விவாதிக்க வேண்டும்.
தண்ணீர் நெருக்கடியால் ஏற்கனவே நலிவடைந்துள்ள மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தையும் சீர்குலைக்கும் மற்றும் தண்ணீர் பிரச்சனை இல்லை என கூறி மக்களை கொச்சைப்படுத்துகிறார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
மேலும்  தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை கருத்தில் கொண்டு நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை இரயில் மூலம் கொடுத்து உதவ முன் வந்த கேரள அரசின் உதவியை தமிழக அரசு மறுத்தது கண்டத்து உரியது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்