மத்திய அரசானது அணைகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர அணைகள் பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிராக திமுக இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானத்தில், ‘ அணைகள் மாநில அரசு கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். அதனை மத்திய அரசு தன்வசப்படுத்தும் பார்க்கிறது அணைகளை பாதுகாக்க மத்திய அரசு மாநில அரசுக்கு தேவையான நிதியை கொடுத்தாலே போதுமானது. மாநில சட்ட மன்றங்களின் தீர்மானங்களை மதிக்காமல் மத்திய அரசு நடந்து வருகிறது. ஆதலால் தமிழக அரசு இந்த தீர்மானத்தை எதிர்க்க வேண்டும்.’ என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ‘ இந்த விவகாரம் குறித்து நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இது இந்த மசோதா தமிழகத்திற்கு எதிரானது. அனைத்து மாநிலங்களும் ஒப்புக் கொள்ளும் வரை இந்த மசோதா நிறைவேற்றக் கூடாது எனவும் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்து உள்ளோம். தமிழகத்திற்கு சொந்தமான 4 அணைகள் வெளி மாநிலங்களில் உள்ள போதும் அந்த அணை கட்டுப்பாடுகள் தமிழகத்திடமே மட்டுமே உள்ளது தமிழகத்திடம் உள்ளது. அதிமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அணை பாதுகாப்பு மசோதா திரும்ப பெறுவதற்கு மத்திய அரசுக்கு மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும். என பதில் தேரிவித்தார்.
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…