சேலம் பிரச்சார கூட்டத்தில் ஒரே மேடையில் பங்கேற்ககும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,மற்றும் ராகுல்காந்தி.
தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சேலம்-உளூந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மதன்லால் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார மாபெரும் பொதுக்கூட்டம் சேலத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் வருகிற 28ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் நடக்கிறது.
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொது செயலாளர் கதிரவன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான், கிறித்துவ நல்லெண்ண இயக்கம் தலைவர் இனிகோ இருதயராஜ், மக்கள் விடுதலை கட்சி நிறுவன தலைவர் முருகவேல்ராஜன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார மாபெரும் பொதுக்கூட்டம் சேலத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் வருகிற 28ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் நடக்கிறது.
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொது செயலாளர் கதிரவன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான், கிறித்துவ நல்லெண்ண இயக்கம் தலைவர் இனிகோ இருதயராஜ், மக்கள் விடுதலை கட்சி நிறுவன தலைவர் முருகவேல்ராஜன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…