பேருந்து வசதி இல்லை என்று கூறிய பெண்ணுக்கு உடனைடியாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு போன் செய்து அசத்தியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.இவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக அமைச்சர்கள் செங்கோட்டையன்,செல்லூர் ராஜு,ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாங்குநேரி தொகுதியில் தெற்கு காடுவெட்டி பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது முதல்வன் படத்தில் வரும் காட்சிபோல புகார் அளித்த பெண் ஒருவருக்கு சம்பத்தப்பட்ட அமைச்சரிடம் உடனடியாக பேச வைத்துள்ளார். அதவாது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பெண்மணி ஒருவர் பேருந்து வசதி இல்லை என புகார் அளித்துள்ளார்.இதற்கு உடனடியாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசியுள்ளார்.மேற்கொண்டு புகார் அளித்த பெண்மணியையும் பேசவைத்து அசத்தியுள்ளார்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சினையை சரி செய்வதாக தெரிவித்தார்.பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பிரச்சினை சரியாகிவிடும் என்று தெரிவித்தார்.இதனால் அந்த ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை : இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழா…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழாவில் கலந்து…
சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக…
சென்னை : மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய கல்வி கொள்கை 2020-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு…
சென்னை : மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
ஹைதிராபாத் : தமிழ், தெலுங்கு சினிமா உலகில் பிரபல பின்னணி பாடகியாக இருக்கும் கல்பனா, கடந்த செவ்வாய் கிழமை அதிகமாக…