2 நாட்களாக செல்போன் கோபுரத்தை காணவில்லை…! போலீசாரிடம் புகார்..!

Default Image

மதுரையில் 2 நாட்களாக செல்போன் கோபுரத்தை காணவில்லை என போலீசில் புகார். 

மதுரை மாவட்டம், கூடல் புதூரில் அமராவதி தெருவில் பிரபல நிறுவனத்தின் செல்போன் கோபுரம் ஒன்று இருந்துள்ளது. இந்த கோபுரமானது 2 நாட்களாக காணாமல் போன நிலையில், அந்நிறுவனத்தின் மேலாளர் முத்து வெங்கடகிருஷ்ணன் அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் செல்போன் கோபுரம் திருடு போனது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் செல்போன் கோபுரம் அமைத்து கொடுக்கும் ஒப்பந்ததாரர், இடத்தின் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக செல்போன் கோபுரம் கழற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்