ஆன்மீகத்திற்கு எதிரானவர் கலைஞர் என சிலர் உருவாக்கபடுத்த பார்க்கின்றனர். திராவிடம் என்பது ஆன்மீகத்தையும், தமிழையும் பாதுகாக்கும் இடம். – அமைச்சர் எ.வ.வேலு.
சேலத்தில் இந்தி எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார். அப்போது பேசிய எ.வ.வேலு, ‘ மத்திய அரசு பல்வேறு வகைகளில் இந்தியை திணிக்க பார்க்கிறது. அதன் ஒரு பகுதி தான் மத்திய அரசு, ஐஐடி பல்கலைக்கழகங்களில் இந்தி மொழியை பயிற்று மொழியாக மாற்ற முயற்சிப்பது. ‘ என குறிப்பிட்டார்.
மேலும், திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி அல்ல. அப்படி தலைவர் கலைஞர் ஆன்மீகத்திற்கு எதிரானவர் என்றால் அத்தனை குடமுழுக்கு விழாக்களை நடத்தி இருக்க மாட்டார். திருவாரூர் தேர் இழுத்திருக்க முடியாது. இத்தனையும் கலைஞர் செய்தார்.
முற்காலத்தில் தமிழை வளர்த்தது பக்தி. பிற்காலத்தில் தமிழை வளர்த்தது திராவிடம். ஹிந்தி வந்தால் தேவாரம், திருவாசம் எல்லாம் பாட முடியுமா.? என கேள்வி எழுப்பினார். ஆன்மீகத்திற்கு எதிரானவர் கலைஞர் என சிலர் உருவாக்கபடுத்த பார்க்கின்றனர். திராவிடம் என்பது ஆன்மீகத்தையும், தமிழையும் பாதுகாக்கும் இடம். என்று குறிப்பிட்டார் அமைச்சர் எ.வ.வேலு.
மேலும் பேசுகையில், ‘ பிரதமர் மோடியும், அமித்ஷாவும் குஜராத் மாநிலத்தில், குஜராத்தி மொழியை இரண்டாம் மொழியாக மாறிவிட்டு, இந்தியை முதன்மை மொழியாக மாற்றி ஏமாந்துவிட்டார்கள். அதே போல எங்களையும் ஏமாற்ற பார்க்கிறீர்கள். வடநாட்டில் இந்தி படித்தவர்களுக்கே வேலை இல்லாமல் பிழைப்புக்காக தமிழகம் வருகின்றனர்.’ என தனது விமர்சனத்தையும் முன் வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…