தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள், கொரோனா வைரஸ் தடுப்பு, தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. இது இந்த வருடத்தின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதையடுத்து ஆளுநர் உரை மீது விவாதம் மூன்று நாள் நடைபெற்று கடந்த 9ம் தேதி பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழக அமைச்சரவை கூட இருக்கிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. எனவே இதனை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. மேலும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்தும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல், மேலும் தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால், நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…