அமைச்சர்கள் டெண்டர்களை எடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்..? ஸ்டாலின்.!

Published by
murugan

டெண்டர்கள் மீது ஆர்வம் காட்டாத ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர்களே  போன் செய்து டெண்டர்களை எடுக்க சொல்லி கட்டாயப்படுத்துவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது என ஸ்டாலின் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நான்காண்டு காலத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்தீர்கள், காலியான அரசு பணியிடங்கள் நிரப்பட்டதா..? பொதுத்துறை நிறுவனங்களில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்பட்டதா..? தமிழகத்தில் மூடப்பட்ட நிறுவனங்களில் திறக்க என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த தேர்தலில் ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை வாங்கி தருவதாக அதிமுக அரசு வாக்குறுதி கொடுத்தார்கள். ஆண்டுக்கு எத்தனை பேருக்கு வேலை கொடுத்து உள்ளீர்கள்..? தொழில்முனைவோர் மாநாட்டில் தொடங்கப்பட்ட தொழில்களில் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

இரண்டாவது தொழில் முனைவோர் மாநாடு நடத்தப்பட்டது. அதில் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது..? தமிழக அரசு பணியாளர்கள் தேர்வு  தேர்வாணைய தேர்வுகள் ரத்து செய்ததற்கு என்ன காரணம், தமிழக பணியிடங்களில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவு சேர்வதற்கு என்ன காரணம் அது எப்படி சாத்தியமானது என கேள்வி எழுப்பினார்.

முதல்வருக்கு இளைஞர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருப்பார், இதை செய்ய மாட்டார் என்றால் அவருக்கு செய்ய தெரியாது. வீட்டிலிருந்தே புகார் அளிக்கலாம் என முதல்வர் கூறுகிறார், ஆனால் அது நிவர்த்தி செய்யப்படுமா..?  தேர்தல் நடக்கும் 6 மாதத்திற்கு முன்னதாகவே பெரிய அளவில் டெண்டர்கள் விட மாட்டார்கள். ஏனென்றால் ஆட்சி முடிவதற்குள் அவற்றை செய்ய முடியாது என்பதால் டெண்டர் தவிர்க்கப்படும்.

ஆனால் தற்போது பணிகள் முடிக்க முடியாது என்று தெரிந்தும் அவசர அவசரமாக டெண்டர் விடப்படுகிறது. அதிமுக ஆட்சியில் டெண்டர் கொள்ளை நடந்து கொண்டே இருக்கிறது. இந்த டெண்டர்கள் மீது ஆர்வம் காட்டாத ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர்களே நேரடியாக போன் செய்து டெண்டர்களை எடுத்துக்கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

6 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

7 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

8 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

10 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

11 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

12 hours ago