மின் இணைப்புகளுக்கு டெபாசிட் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் வி.செந்தில் பாலாஜி எச்சரிக்கை

Published by
Edison

மின் இணைப்புகளுக்கு டெபாசிட் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர் மாவட்டடத்தில் உள்ள தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட்(டிஎன்பிஎல்) ஆலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 150 படுக்கைகள் வசதி அமைப்பது குறித்து,தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்,மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து,அமைச்சர் செந்தில் பாலாஜி மின்கட்டணம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது ,”மின் கட்டணம் செலுத்த,தேவையான கால அவகாசத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். தற்போது இரண்டு மாதங்களுக்கான,மின் கணக்கீடு முறைப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் நடந்த குளறுபடிகள் மீண்டும் வந்து விடக்கூடாது என்பதற்காக,மிகத் தீவிரமாக ஆய்வுகள் செய்து,அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக,கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில்,மின் இணைப்புகளுக்கு கூடுதல் டெபாசிட் வசூல் செய்யக்கூடாது என, மின் வாரியத்தின் மூலம் அனைத்து அலுவலகங்களுக்கும் கடந்த 10 ஆம் தேதியே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதனை மீறி,மின் இணைப்புகளுக்கு கூடுதல் டிபாசிட் வசூல் செய்தால், மின் துறை சார்பில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.அதுமட்டுமல்லாமல்,தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட, இரண்டு மாத மின் கணக்கீட்டை ஒரு மாதமாக மாற்றுவது குறித்து, விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்”,என்று கூறினார்.

Recent Posts

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

20 minutes ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

53 minutes ago

“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!

இஸ்லாமாபாத் :  நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…

1 hour ago

“தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது” மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி.!

டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…

2 hours ago

ரெய்டை திசை திருப்ப இப்படி பண்றோமா? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த துணை முதல்வர் உதயநிதி!

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…

2 hours ago

உங்கள் மகன்களுக்கு 2-வது மொழியா? பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை கேள்வி!

சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…

2 hours ago