தேர்தல் பணி… மேற்கு மண்டல பிரதிநிதியாக களமிறங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Published by
பாலா கலியமூர்த்தி

நாடளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தலைமை தேர்தல் ஆணையம் ஒருபக்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மறுபக்கம் தேர்தலுக்கான பல்வேறு பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது குறித்து பிரதான அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில், சில கட்சிகள் தேர்தல் பணி குழுவை அமைத்து அறிவித்து வருகிறது.

அந்தவகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தல் குழு நேற்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று திமுக சார்பில் தேர்தல் குழு அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஒருங்கிணைப்பு குழு, தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு, அறிக்கை தயாரிப்பு குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்…. திமுக சார்பில் தேர்தல் பணி குழு அறிவிப்பு!

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கே.என்.நேரு தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள, திமுகவின் மேற்கு மண்டல பிரதிநிதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் களமிறங்குகிறார். இந்த ஒருங்கிணைப்பு குழுவில் மண்டலத்துக்கு ஒருவர் என அமைச்சர்கள் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க உள்ளனர்.

அதன்படி, வடக்கு மண்டலத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு, தெற்கு மண்டலத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று, டெல்டா மண்டலத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மண்டலத்துக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி என தேர்தல் ஒருங்கிணைப்பு குழு செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, திமுக தேர்தல் பணிக்குழு குறித்த அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில், தொடங்கியது நாடாளுமன்ற தேர்தல் பணி, பணி முடிப்போம்! வெற்றி வாகை சூடுவோம்! இந்தியா வெல்லும் என பதிவிட்டுள்ளார்.

Recent Posts

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

7 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

9 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

10 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

11 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

12 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

12 hours ago