அண்ணாமலையை சும்மா விட்ருவோமா.? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.!
அண்ணாமலை மீது நானும் மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக சொத்துப்பட்டியல் (DMKFiles) என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்துக்கள் என குறிப்பிட்டு பல்வேறு தகவல்களை வெளியிட்டு இருந்தார். திமுக எம்பிக்கள் கனிமொழி, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, கதிர் ஆனந்த், திமுக அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் பெயர்கள் அதில் இடம்பெற்று இருந்தன.
500 கோடி இழப்பீடு :
இந்த DMKFiles விவகாரம் குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில், இந்த குற்றச்சாட்டுக்கு 48 மணி நேரத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும், 500 கோடி ரூபாய் இழப்பீடாகத் தர வேண்டும் என்றும், DMK files என்ற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் நீங்கள் தி.மு.க கட்சிமீது பல தவறான, ஆதாரமற்ற, அவதூறான, கற்பனையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருகிறார் என ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டு இருந்தார்.
அண்ணாமலை விளக்கம் :
அதற்க்கு பதில் அளிக்கும் வகையில் அண்ணாமலை ஆர்.எஸ்.பாரதிக்கு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நான் தயார். எனவும், திமுகவினருக்கு கோடிக்கணக்கில் சொத்து உள்ள போது, மேலும் ரூ.500 கோடி கேட்கிறார் ஆர்.எஸ்.பாரதி. என் மீதும் பாஜக மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு 48 மணி நேரத்தில் ஆர்எஸ் பாரதி விளக்கம் தர வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடரப்படும். என அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.
சும்மா விட்ருவோமா.?
அண்ணாமலை DMKFiles என குறிப்பிட்டு வெளியிட்ட வீடியோ குறித்து நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் . இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் உதயநிதி, என்னிடம் இத்தனை கேள்வி கேட்கிறீர்கள், அதேபோல அவரிடம் (அண்ணாமலை) கேட்டு இருக்கலாமே.? அவரும் ஸ்கூல் வாத்தியார் மாதிரி பாடம் எடுத்துட்டு இருக்கார். நீங்களும் உக்காந்து கேட்டுட்டு இருக்கீங்க. என செய்தியாளர்களிடம் கேட்ட அமைச்சர் உதயநிதி, அதெப்படி சும்மா விடுவோம் . கண்டிப்பாக அவர் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடருவோம் என செய்தியாளர்களிடம் பேசினார்.