முதற்கட்ட நிவாரண பணிகள்.. அரசியல் செய்ய வேண்டாம்.! அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்.!

Published by
மணிகண்டன்

தென் மாவட்டத்தில் பெய்த அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெரு வெள்ளத்தால், உயிர்சேதம், பொருட்சேதம், கால்நடை உயிர்சேதம் என பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு மாவட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு பின்னர் வெள்ள நிவாரண உதவி தொகை விவரங்களை அறிவித்தார். ரேஷன் கார்டுதரர்களுக்கு தலா 6000 ரூபாய், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய், சேதமடைந்த வீடுகளுக்கு நிதியுதவி , கால்நடை உயிரிழப்புகளுக்கு நிவாரணம் என பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்தார்.

வெள்ளத்தை கையாள்வதில் தமிழக அரசு தோல்வி! தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

அதற்கான கணக்கெடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக நிவாரண பணிகள் தொடங்கப்பட்டுள்ளன . அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  முதற்கட்ட நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். உடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் உள்ளனர்.  அப்போது கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தோருக்கு நிவாரண உதவிகள், கால்நடை நிவரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,தற்போது நெல்லை மாவட்டத்தில் மட்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முதற்கட்டமாக வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொடுக்கப்படும். நிவாரண பணிகள் விவகாரத்தில் பிற கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இது நூறு வருடத்தில் இதுவரை பெய்யாத கனமழை அளவாகும். இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பின்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருவது குறித்து செய்தியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தென் தமிழகம் வரட்டும். வந்து பேரிடர் பாதித்த பகுதிகளை பார்வையிடட்டும் பின்னர் மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிதி உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறினார்.

மேலும் பிரதமர் மோடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக தொலைபேசியில் பேசினார். அப்போது தமிழக முதல்வர் பிரதமரிடம் தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள விரைவாக பேரிடர் நிவாரண நிதி உதவிகளை அளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.

Recent Posts

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

2 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

4 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

6 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

7 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

8 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

8 hours ago