அமைச்சர் தங்கமணி நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை…!விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம்
அமைச்சர் தங்கமணி நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என்று விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
உயர்மின்கோபுரம் குறித்து விவசாயிகளுடன் அமைச்சர் தங்கமணி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதன் பின்னர் விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் கூறுகையில், உயர்மின்கோபுரங்களை விளைநிலங்கள் வழியாக இல்லாமல் வேறு வழியாக கொண்டு செல்ல கேட்டுக்கொண்டோம். இந்தியாவில் எங்கும் கேபிள் மூலம் கொண்டு செல்லும் திட்டம் இல்லை என அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். அமைச்சர் தங்கமணி நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என்று விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.