புதிய குடியிருப்புகளுக்கான ஆணையை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

Default Image

வீடுகளை இழந்த 28 குடும்பங்களில் 17 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்புகளுக்கான ஆணையை வழங்கினார் அமைச்சர்.

சென்னையின் திருவொற்றியூரில் அரிவாகுளத்து பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு கட்டடம் திடீரென டிச.27-ஆம் தேதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால், அங்கு D பிளாக் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகின.

கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், மக்கள் விபத்துக்கு முன்தினம் இரவே வெளியேறியதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து, இடிந்த குடியிருப்புக்கு பதிலாக மாற்று வீடுகள் விரைவில் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை, திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவத்தில், வீடுகளை இழந்த 28 குடும்பங்களில் 17 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்