போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பேருந்துகளை மறித்தால் நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள், ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், அகவிலைப்படி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோரிக்கைகள் தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை என்பதால், திட்டமிட்டபடி இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் போக்குவரத்துக்கு தொழிற்சங்கங்கள். இதன் காரணமாக பல இடங்களில் அரசு போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பேருந்து முனையத்தில் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர், தமிழக முழுவதும் பொதுமக்கள் பாதிப்பின்றி வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இதனிடையே, பல்வேறு இடங்களில் உள்ள போக்குவரத்து பணிமனைகள் முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை, சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.

அரசு பேருந்துகள் இயக்கம்… மண்டல வாரியான விவரத்தை வெளியிட்டது போக்குவரத்துத்துறை!

மதுரை, ஆரணி, காஞ்சிபுரம், திண்டிவனம், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், பேருந்துகளை இயக்கம் ஓட்டுநர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்கை உடனடியாக கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். பொங்கல் பண்டிகை நேரத்தில் மக்களின் சிரமங்களை கருத்தில்கொண்டு போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பேருந்துகளை மறித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், தமிழ்நாடு முழுவதும் 94 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வுக்கு பிறகு அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

11 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago