கோயில் காணிக்கை நகைகள்.. விளக்கம் அளித்த அமைச்சர் சேகர்பாபு.!

Published by
மணிகண்டன்

இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் நாள் கூட்டம் காலையில் தொடங்கியது. அப்போது பல்வேறு துறை அமைச்சர்கள், உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தனர். அப்போது அறநிலையத்துறை குறித்து உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதாவது கோயில் காணிக்கையாக செலுத்தப்படும் நகைகள் உருக்குதல் பற்றிய விவரங்கள் கேட்டிருந்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : கலைஞர் பெயர் வைத்தது தான் ஒரே காரணம்.! சேகர்பாபு பரபரப்பு…

அதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அவர் கூறுகையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் காணிக்கையாக வரும் நகைகளை உருக்கி அதனை கோவில் கணக்கில் வைப்பு நிதியாக மாற்றும் திட்டத்தை 2006 முதல் 2010 ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்தார்.

அப்போதான் திட்டத்தின் கீழ் கோயில் நகைகள் உருக்கி வைப்பு நிதியாக வைக்கப்பட்டன. ஆனால் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதனை அடுத்து தற்போது மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் பல்வேறு கோயில்களில் இருந்து 100 கிலோவுக்கும் அதிகமாக தங்க நகைகள் சேகரிக்கப்பட்டன.

இதில் குறிப்பிட்ட ஐந்து கோவில்களில் காணிக்கையாக வந்திருந்த தங்க நகைகளை உருக்கி சுமார் 190 கோடி ரூபாய் பணம் ஈட்டி அதனை கோவில் வைப்பு நிதியாக வைத்துள்ளோம். இதன் மூலம் ஆண்டுக்கு அந்த ஐந்து கோவில்களில் மட்டும் நான்கு கோடி ரூபாய் வட்டியாக கிடைத்து வருகிறது.

அதேபோல, தற்போது காணிக்கை நகைகளை சேர்த்து வைத்துள்ளோம். வரும் 20ஆம் தேதி மத்திய அரசின் உத்தரவின் கீழ் நகை உருக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதி கோயில் வைப்பு நிதியாக வரவு வைக்கப்படும். இதனால் ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் வகையில் இருக்கும். திருக்கோவில் வருவாய் அனைத்தும் ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவின் தலைமையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago