2 லட்சம் மின் கம்பங்கள், மின்மாற்றிகள், மின் கடத்திகள் தயார்.! அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.!

Published by
மணிகண்டன்

18,350 மின் மாற்றிகள், 5000 மின் கடத்திகள், 50,000 மின் கம்பங்கள் புதியதாக வரவழைக்கப்பட்டு, 2 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. 

வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். மின்துறை சம்பந்தமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.

 அவர் கூறுகையில், 2700 பில்லர் பாக்ஸ்  மூலம் சென்னையில் தரையில் இருந்து 1 மீ அளவுக்கு உயர்த்தி  இப்பொது மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் மட்டும் பகல் நேரத்தில் 1440 ஊழியர்களும், இரவு நேரத்தில் 600 ஊழியர்களும் பணியில் இருப்பதாகவும், 100 சதவீதம் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்டார்.

நேற்று இரவு மட்டும் 2 இடங்களில் மின் பாதிக்கப்பட்டது. 10 நிமிடத்தில் அந்த புகார்கள் சரிசெய்யப்பட்டது. 18,350 மின் மாற்றிகள், 5000 மின் கடத்திகள், 50,000 மின் கம்பங்கள் புதியதாக வரவழைக்கப்பட்டு, 2 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது எனவும் அதன் மூலம் சீரான மின் விநியோகம் வழங்கப்படும் எனவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

3 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

8 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

26 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

56 mins ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

12 hours ago