அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் எனது பெயர் இடம் பெறாதது மகிழ்ச்சி என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள பெரியகொடிவேரி பேரூராட்சியில் சந்தை திடலை மேம்படுத்த பூமிபூஜையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் மூலமாக தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்கின்ற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி திட்டத்திற்காக தனியார் பள்ளிகளுக்கு தற்போது வரை 943 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்காக வழங்கவேண்டிய 372 கோடி ரூபாயை விரைவில் முதல்வர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
புதிய கல்விக்கொள்கையில் மழலையர் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க உத்தரவிட்டது. ஆனால், இதற்கு முன்பே தமிழக அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் தமிழ்வழி பள்ளியை திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.மேலும் மகாராஷ்டிராவில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளியை மீண்டும் துவங்க முதல்வர் ஆலோசனயின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.என்று தெரிவித்தார் மேலும் அவரிடம் நிரூபர்கள் அதிமுக வழிகாட்டுதல் குழுவில் உங்களது பெயர் இடம் பெறவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் எனது பெயர் இடம் பெறாதது மகிழ்ச்சி இதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.என்று செங்கோட்டையன் கூறினார்.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…