அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் எனது பெயர் இடம் பெறாதது மகிழ்ச்சி என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள பெரியகொடிவேரி பேரூராட்சியில் சந்தை திடலை மேம்படுத்த பூமிபூஜையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் மூலமாக தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்கின்ற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி திட்டத்திற்காக தனியார் பள்ளிகளுக்கு தற்போது வரை 943 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்காக வழங்கவேண்டிய 372 கோடி ரூபாயை விரைவில் முதல்வர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
புதிய கல்விக்கொள்கையில் மழலையர் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க உத்தரவிட்டது. ஆனால், இதற்கு முன்பே தமிழக அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் தமிழ்வழி பள்ளியை திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.மேலும் மகாராஷ்டிராவில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளியை மீண்டும் துவங்க முதல்வர் ஆலோசனயின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.என்று தெரிவித்தார் மேலும் அவரிடம் நிரூபர்கள் அதிமுக வழிகாட்டுதல் குழுவில் உங்களது பெயர் இடம் பெறவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் எனது பெயர் இடம் பெறாதது மகிழ்ச்சி இதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.என்று செங்கோட்டையன் கூறினார்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…