தேர்வு எப்போது..? முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை.!

Default Image

இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தயுள்ளார்.

கடந்த 2 நாள்களுக்கு முன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகின்ற ஜூலை 1 முதல் 15-ம் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறாமல் உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்த அறிவிப்பை ஒன்றை  பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

 அதில், தமிழகத்தில் ஜூன் மாத இறுதியில்  10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும் என கூறினார். இந்நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், 10 வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி குறித்து ஆலோசனை செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்